November 30, 2011

Sri lanka வீரர்கள்















பக்அப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான கோப்புகள்

கணணி பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள தகவலினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பக்அப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கணணி என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.
இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான கோப்புகளை பக்அப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கியமான கோப்புகள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த கோப்புகளை எல்லாம் பக்அப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா கோப்புகளையும்(வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் கோப்புகள்)பக்அப் எடுக்க வேண்டும்.
எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 கோப்புகள், வீடியோ கோப்புகள் என இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்த எல்லா கோப்புகளையும் பக்அப் எடுக்க வேண்டும்.
மின்னஞ்சல்கள், மின்னஞ்சல்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இணையச் சேவைகள் தொடர்பானவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும்.
உங்களது கோப்புகள்: எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற கோப்புகள் My Documents என்ற கோப்பறையில் தான் கணணி சேமிக்கும். எனவே இந்த கோப்பறையை பக்அப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கணணியில் படங்களை My Pictures கோப்பறையிலும், ஓடியோ கோப்புகளை My Music கோப்பறையிலும், வீடியோ கோப்புகளை My Video கோப்பறையிலும் போட்டு வைக்கும். இந்த கோப்பறைகள் எல்லாமே My Documents கோப்பறையின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents கோப்பறையை பக்அப் எடுத்தால் இவையும் தாமாகவே பக்அப் ஆகிவிடும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்: மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பக்அப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது.
ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.
எழுத்து வகைகள்: பல அப்ளிகேஷன்களை உங்கள் கணணியில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கணணியில் நிறுவி இருக்கும். இணையத்தில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கணணிக்கு தரவிறக்கம் டவுன்லோடு செய்திருப்பீர்கள்.
C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள கோப்பறையில் தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பக்அப் எடுங்கள்.
இணைய விவரங்கள்: இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பக்அப் எடுக்க வேண்டும்.
எப்படி பக்அப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை நீங்கள் பக்அப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பக்அப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பக்அப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற கோப்புகள் கணணியில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பக்அப் எடுப்பது நல்லது.

பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

மிகப்பெரிய சமூக இணையதளமான பேஸ்புக் சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்டது. சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள்.
இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின் படி:
38 வயதில் உள்ளவர்கள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள்.
26% பேர் மற்றவர்களின் போஸ்ட்டை Like செய்கிறார்கள்.
பேஸ்புக் உபயோகிப்பவர்களில் 22% பேர் 10 ஆம் வகுப்பிற்கும் கீழே படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.
ஒருவர் சராசரியாக 229 நண்பர்களை பெற்று இருக்கிறார்கள். இதில் 7% பேர் இதற்கு முன் தெரியாதவர்கள்.

ஆப்பிளின் ஐபேட் (IPAD) விரிவான அறிமுகம்


தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான்.

இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள்.

ஐபோன் வருவதற்கு முன்பு மொபைல் சந்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தொடுதிரை மொபைல் என்பது கனவுதான். ஆனால் ஐபோன் வந்த பின்பு எத்தனை நிறுவனங்கள் வகை வகையான தொடுதிரை மொபைல்களை போட்டு தாக்கி வருகின்றன. மொபைல் போன் சந்தையில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது ஐபோன் என்றால் அது மிகையாகாது.  ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துவது அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறது.



மடிக்கணினிக்கும், மொபைல் போன்களுக்கும் இடையில் எளிதாக எங்கும் எடுத்து செல்லும் எளிமையுடன் நெட்புக் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறிய திரைகளுடன் கூடிய நெட்புக் கணினிகளை வெளியிடத் துவங்கி உள்ளன.

கூகிள் நிறுவனமும் தனது புதிய இயங்குதளமான குரோம் ஓஎஸ் ஆரம்பத்தில் நெட்புக் கணினிகளுக்காகத்தான் வெளியிடுகிறது. இவை நேட்புக் கணினிகளுக்கான சந்தை எதிர்காலத்தில் அதிகம் இருப்பதை உணர்த்துகிறது.

இந்த சந்தையையும் தனது வித்தியாசமான தயாரிப்பு மூலம் கலக்கப் போகிறது ஆப்பிள். நேற்று (ஜனவரி 27, 2010) ஐபேட் (IPad) எனும் தனது புதிய தயாரிப்பை உலகுக்கு தந்துள்ளது.  தோற்றத்தில் பெரிய ஐபோன் போன்று இருக்கும் ஐபேட் 9.5 இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. இது Wi-Fi, Wi-Fi + 3G என்று இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டு உள்ளது.


விலையைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் இல்லை. Wifi மாடல் 499 டாலரில் இருந்தும், 3G+Wifi மாடல் 629 டாலரில் இருந்தும் கிடைக்கிறது. ஐபோன்களின் அறிமுக விலையை ஒப்பிடும் போது ஐபேட்டின் விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

மொத்தத்தில் ஆப்பிளின் ஐபேட் புதுமையான, கவர்ச்சிகரமான தயாரிப்பாக வந்துள்ளது. ஆனால் சூப்பர் என்று கொண்டாடுவதற்கு குறைகள் இன்றி இல்லை. இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் நாம் கூறிய குறைகள் அற்ற ஐபேட் போன்ற புதிய தயாரிப்புகள் கூகிள், நோக்கியா போன்ற நிறுவனங்களிடம் இருந்து வரலாம்.  அதற்குள் ஐபேட் சந்தையை ஆக்ரமித்து கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்

ணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும் நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின் சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. 



எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.

அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.


இது முற்றிலும் இலவசம்.  தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.

விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது. தற்சமயம் வீடியோ பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச ஆன்லைன் HTML எடிட்டர்.

இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
                                                           http://www.htmlinstant.com
சாதாரன Notepad -ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம்
உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத்தளத்திற்கு சென்று
நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் Html மொழியை தட்டச்சு
செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன்
காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு
Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று
உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள்

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நாமும் , ஆன்லைன் மூலம்
பொருட்கள் விற்கும் நிறுவனமும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றிதான் இன்றைய சிறப்பு
பதிவு.
ஆன்லைன் மூலம் சேலை வாங்குவதில் தொடங்கி தங்கநகை
வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனிலே வந்துவிட்டது
இருந்தும் இன்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
விரும்புவதில்லை , எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருளுக்கான
பணத்தை எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்
செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்களும்
இதே போல் தான் இருக்கின்றனர், உடனே நாம் கூறுவது
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவர்கள் என்று, நிச்சயமாக
இல்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் அத்தனை பரிணாமமும்
அறிந்தவர்கள் எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை அடிப்பதை ஆரம்பித்தவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள் தான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இவர்களிடம் தப்பாத எந்த நிறுவனமும்
இல்லை என்றே கூறலாம், ஆனால் இவர்கள் முன்பு பயன்படுத்திய
முறையைத்தான் நைஜிரியா நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள்
இப்போது பயன்படுத்துகின்றனர். நைஜிரியா நாட்டு கொள்ளையர்கள்
சிறிய அளவு பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் கம்பி எண்ணிய விசயம்
நாம் அறிந்ததே, ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு கொள்ளையர்கள்
தற்போது செய்வது ஐபி புரொட்டோகோலில் இருக்கும் ஓட்டைகளை
பயன்படுத்தி எந்த இணையதளத்தை முடக்க வேண்டும் இதற்கு
எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டு
இருக்கின்றனர்.மிகப்பெரிய நிறுவனமான கூகிளே படாதபாடு
படுத்திவிட்டனர் என்றால் நம் நிறுவனத்தின் தளத்தை பாதுகாப்பது
எவ்வளவு கடினமான முயற்சி என்று நமக்கு தெரியும். சில
நிமிடங்களில் உங்கள் வங்கியின் கணக்கில் உள்ள பணத்தை
திருடும் அளவு முன்னேறி இருக்கின்றனர்.

இணையத்தளத்தில் வணிகம் செய்வதற்கு பயன்படும் paypal

உலகின் முன்னணி இணையதள பணப் பரிமாற்று பதன சேவை ஆகும்.
  1. மூலம் என்ன என்ன வாங்கலாம் ?
  • Ebay.Com இல் அனைத்தையும் வாங்கலாம்.
  • Webhosting,Domain Registration
  • Rapidshare & Other File hosting Premium Accounts
  • Softwares & Upgrades
  • & Other millions of Web Services

  1. இலங்கையில் PayPal
  • புதிய கணக்கை இங்கே திறந்து கொள்ளலாம்
  • நீங்கள் கணக்கை திறந்த இரண்டொரு நாட்களில் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
  •  மீண்டும் உங்கள் கணக்கை செய்ய நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பதிவு செய்யும் பொது வழங்கிய வீடு முகவரி என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சிலவற்றை சமர்பிக்க வேண்டும்.
  • என்ன என்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் ?
    *உங்கள் கடவுசீடின் காபி (Passport)
    *உங்கள் கடனட்டையின் முன்பக்க காபி (Credit Card)
    *உங்கள் வங்கி கணக்கின் (Account Book) முன்பக்கம் (Must Contains Your Name & Address)
    *வாகன ஓட்டுனர் பத்திரம் (Driving Licence)
  • PayPal ஊடாக கொள்வனவு செய்ய நீங்கள் ஒரு கடனட்டையை இணைக்க வேண்டும். (Sampath Bank இன் WebCard யும் USE பண்ணலாம். Sampath Bank கு சென்று WebCard Application ஒன்றை பெற்று கொள்ளுங்கள்.)
  • உங்கள் கடனட்டையை இணைத்தபின்பு ஒரு 4 எழுத்து கடவு சொல்லை PayPal கேட்கும்.
    உடனயே உங்கள் Credit Card Statement ஐ Check பண்ணி அதை பதியவும் .


  • அலது உங்கள் வங்கி வாடிகயாளர் சேவையை தொடர்பு கொண்டு அந்த Verification Code ஐ பெறலாம்.

புது வரவு

                                                         லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம். ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து. ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து. பொதுவாக‌வே ஆப்பிளின் புதிய‌ அறிமுக‌ம் என்றாலே ஒரு மித‌மிஞ்சிய‌ எதிர‌பார்ப்பு இருக்க‌த்தான் செய்யும்.சில ஆண்டுகளூக்கு முன் ஐபோன் அறிமுக‌மான‌ போது திருவிழாவிக்கு நிக‌ரான் கோல‌க‌ல‌ நிகழ்வாக‌ அமைந்த‌து. ஐபோட் வெற்றியை தொட‌ர்ந்து ஆப்பிள் செல்போன் ச‌ந்தையிலும் நுழைய‌லாம் என்று ஆருட‌ம் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் ஆப்பிள் ஐபோனை க‌ள‌மிற‌க்கி அச‌த்திய‌து. ஐபோனின் வெற்றி இன்று மாபெரும் தொழில்நுட்ப‌ ச‌காப்த‌மாக‌ திக‌ழ்கிற‌து.ஐபோனின் வ‌ருகை செல்போன் ச‌ந்தையையே மாற்றி அமைத்து விட்ட‌து. இந்த‌ பின்ன‌னியில் தான் கொஞ்ச‌ கால‌மாக‌வே ஆப்பிள் புதிய‌தொரு சாஅத‌ன‌த்தை அறிமுகம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ந‌ம்மூரில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் காத‌ல் க‌தை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளை வெளியிடும் உற்சாக‌த்தோடு ஆப்பிளின் புதிய‌ சாத‌ன்ம் ப‌ற்றி ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல்க‌ளும் யூக‌ங்க‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌. இத‌னிடையே ஆப்பிள் 27 ம் தேதி இந்த‌ சாத‌ன‌ம் வெளியாகும் என்று அதிகார‌பூர்வ‌மாக‌ அறிவித்த‌ நிலையில் இந்த‌ யூக‌ங்க‌ள் வ‌லுப்பெற்ற‌ன‌.புதிய‌ வகை டேப்ல‌ர் க‌ம்ப்யூட்ட‌ராக‌ இது இருக்கும் என்ப‌தை பெரும்பாலான‌ யூக‌ங்க‌ள் உறுதி செய்த‌ன‌. இந்த‌ டேப்லெட் க‌ம்ப்யூட்ட‌ர் ஈ புக் வ‌ச‌தி கொன்ட‌தாக‌ இருக்கும்,வீடியோ கேம் ம‌ற்றும் செய‌லிக‌ளில் புதிய‌ பாய்ச்ச‌லாக‌ அமையும் என்றெல்லாம் பேச‌ப்ப‌ட்ட‌து. அதைவிட‌ முக்கிய‌மாக‌ நாளித‌ழ்க‌ள் மாறு ப‌த்திரிக்கைக‌ளுக்கான‌ புதிய‌ வ‌ழியாக‌வும் விள‌ங்கும் என்றும் க‌ணிக்க‌ப்பட்ட‌து. இந்நிலையில் ஆப்பிள் வ‌ழ‌க்க‌ப்ப‌டி அத‌ன் நட்ச‌த்திர‌ த‌லைமை அதிகாரியான‌ ஸ்டீவ் ஜாப்ஸ் ப‌ர‌ப்புக்கு ஈடுகொடுக்கும் வ‌கையில் புதிய‌ சாத‌னாமான‌ ஐபேடை அறிமுக‌ம் செய்துள்ளார். ஐபேட் டேப்லெட் வ‌கையை சேர்ந்த‌தாக‌ அமைந்துள்ள‌து. ஐபோனை விட‌ ச‌ற்றே பெரிதாக‌ இருந்தாலும் தோற்ற‌த்திலும் வ‌டிவ‌மைப்பிலும் அத‌னை ஒத்திருக்கிற‌து.அரை இன்ச் அக‌ல‌ம் கொண்ட‌ ஐபேட் லேப்டாப்பை விட‌ எடை குறைந்த‌தாக‌ உள்ள‌து.வை பீ ம்ற்றும் ப்ளுடூத் வ‌ச‌தி கோன்டுள்ள‌து. அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம் என்று பார்த்தால் பத்து ம‌ணி நீடிக்க‌ கூடிய‌ பேட்ட‌ரி,அழகான‌ தொடு திரை,ஐபுக் என்னும் புத்த‌க‌ வாசிப்பு வ‌ச‌தி என‌ அடுக்கி கொண்டே போக‌லாம். இதில் வீடியோ கேம் ஆட‌லாம். ப்ட‌ம் பார்க்க‌லாம். விடியோ கேமை பொருத்த‌வ‌ரை வேக‌த்தை கூட்டும் வ‌ச‌தி கூடுத‌லாக‌ உள்ள‌து.ப‌ட‌ம் பார்க்க‌ ஏற்ற‌ பெரிய‌ திரை கூடுத‌ல் சிற‌ப்ப‌ம‌ச‌ம். புத‌த‌க‌ வ‌ச‌தியை பொருத்த‌வ‌ரை புத்த‌க‌ அல‌மாரி போன்ற‌ அமைப்பிலிருந்து புத்த‌கத்தை உருவும் வ‌ச‌தியும் ப‌க்க‌ங்க‌ளை தொட்டு திருப்பும் வ‌ச‌தியும் குறிப்பிட‌த்த‌க்க‌து, எல்லாவ‌ற்றையும் விட‌ ஆச்ச‌ர்ய‌ம் இத‌ன் விலை தான். ஆயிர‌ம் டால‌ராவ‌து இருக்கும் என்று கூற‌ப்ப‌ட்ட‌ நிலையில் 499 டால்ர் முத‌ல் கிடைக்க‌ உள்ள‌து.

நட்பைக்கொடு

என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில........

காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

  1. காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும்.  உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது?  பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
  2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்) 
  3.  அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க..
  4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க) 
  5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது. 
  6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும். 
  7. "நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க) 
  8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.


இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.


அழகான கன்னங்களை பெற வேண்டுமா?

  • அழகான கன்னங்களை பெற வேண்டுமா? உங்கள் முகம் மற்றவர்களை வசீகரிக்க வேண்டுமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டி இருப்பது ஒரு பெரிய குறையே இல்லை.
  • ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் மிக எளிதாக அழகான கன்னங்களை பெறலாம். உணவில் பெரும்பாலும் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த பொருட்களை நிறைய சேர்க்க வேண்டும்.
  • பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
  •  பருப்பு, கீரைகள், ஆகிய உணவுகளை அதிகம் சோ்த்து கொள்ள வேண்டும்.
  •  குறிப்பாக தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். தேவையில்லாமல் கவலைப்படுவதை விட்டு விடுங்கள்.
 இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி விடும்.

"தாயே…"

தாயே…
வாழ்கை முழுவதும் போற்றப்பட வேண்டியவள் நீ.
இன்று, உன்னைக் காலம்
வரையறை எனும் சிறையில் அடைத்திருக்கிறது,
அன்னையர் தினம் என்ற பெயரில்.
10 மாதங்கள் கருவிலும்,
மிகுதி மொத்த வாழ்வில் நெஞ்சிலும்.

என்னை சுமக்கும் ஜீவன் நீ.
நீ என்னை ஈன்றெடுக்கப் பட்ட வலி போதும்.
எதையும் செய்யலாம்,
உன் அந்த வலி நொடிக்காக…
வெள்ளை அமுதம் ஊட்டி,
இரவில் கண் விழித்து,
இரக்கத்துடன் எனக்காய் வாழ்ந்த,
என் தாயே…
உனக்காக வரைகின்றேன்
என் கவியனும் ஓவியத்தை…
என் பாசத்துக்குரியவள் நீ,
என்னைப் பக்குவப் படுத்தியவளும் நீ,
என் முதல் பாடசாலை நீ,
என்னை பகுத்தறிய வைத்தவளும் நீ,
என் தென்றலும் நீ,
என் முதல் தோழியும் நீ,
என் வசந்தம் நீ,
என் முழு வாழ்கையும் நீ,
என் இருளில் துனைவிளக்கு நீ.
நான் உன் கரம்பிடித்து நடந்த காலங்கள்…
என் வாழ்வில் தெவிட்டாத கரும்புச் சாறுகள்.
மழையோடு நாம் நனைந்த என் பாடசாலை முதல் நாள்,
நீ எனக்கு கதை சொல்லிச் சோறு ஊட்டும் நாட்கள்,
நாம் ஊஞ்சல் ஆடி சிரித்து மகிழ்ந்த நாட்கள்,
நான் உன்னை விட்டுப் பிரிந்த அந்த முதல் நாள்…
கடற்கரை மணலில் நீ என்னோடு விளையாடிய இனிமையான நேரங்கள்,
உன்னை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் பசுமையான இரவுகள்,
வெடிச்சத்தம் கேட்டு பயத்தால் உன் மடியோடு விடிந்த பொழுதுகள்,
நான் உன் கைப் பிடித்து நடந்த தெருக்கள்…
உன் அரவனைப்புக்கள்,
நீ தந்த ஆறுதல்கள்,
என்னால் நீ சொட்டிய இன்ப ஈரத்துளிகள்,
எனக்கு ஊட்டிய ஊக்கங்கள்,
உன் எதிர்பார்புகள்,
எனக்கான உன் ஏவல்கள்,
இன்று இவை எல்லாம்
என் வாழ்வில் கடந்து விட்ட கனாக்கள்…
அழகான அன்பு,
ஆழமான பாசம்,
இனிமையான குணம்,
ஈகைக்கான மனம்,
உயர்ந்த எளிமை,
ஊமையான பணிவு,
எப்போதும் மறையாப் புன்னகை,
ஏழ்மையான நளினம்,
ஜம்புலன்களின் அடக்கம்,
ஒத்து நிற்க்கும் ஒற்றுமை,
ஓய்வில்லா முயற்சி,
ஒளடதம் போன்ற உன் கோபம்,
உன்னில் நான் படித்த 12 பாடங்கள்.
தாயே…
நீ யார் என்று யாரும் கேட்டால் என்னை,
என் கைகள் காட்டும் திசை உன்னை.
இமை கண்னை காப்பது போல என்னை
காத்து நின்றவள் நீ.
ஒரு சுமை தாங்கி போல என்
சுமையை சுமந்தவள் நீ.
என் அறியாப் பருவத்தில் உன் கருணைக் கண்டிப்பை
தட்டிக் கழித்த காலம்.
என் குரும்புச் செயலால் நீ குழம்பி நின்ற
அந்த தருணம்.
என் பேச்சு திறனால் நீ வாயடைத்து மௌனித்த
அந்த மௌனம்.
என் மழழைப் பருவத்தில் மற்றவர்களை
சங்கடத்தில் ஆழ்த்தும் அழுகையால்
நீ சங்கடப்பட்ட நேரம்.
நோய்கள் அனைத்தையும் உள்வாங்கிய என்னை
நீ சுகப்படுத்த நடத்தும்
போராட்டம்.
பள்ளிப் பருவத்தில் நீ சொல்லிக் கொடுத்த
பாடம்.
நான் தவறு செய்கின்ற போது நீ தண்டிகின்ற
நியாயம்.
என் அப்பாவையும் என்னையும் சமாதனப்படுத்த
நீ பாவிக்கும் உன் ஞானம்…
என்று உன் ஒவ்வொரு அசைவும்,
அச்சடிக்கப்பட்டு விட்டது என் நெஞ்சுக்குள்.
நான் உன்னிடம் சொல்லிய பொய்கள்,
என் அவசரத்தில் உன்னை திட்டிய தருணங்கள்,
நான் உனக்கு அழித்த ஏமாற்றங்கள்,
இவைதான் என் வாழ்வில் நானே மன்னிக்காத
மகா தவறுகள்…
உன் விருப்பு வெறுப்பை ஓரம் கட்டி,
என் விருப்பதுக்கு முதலிடம் கொடுத்தவள் நீ.
தாயே
ஆயிரம் உறவுகள் இருந்தும் என்ன??
உன்னைப் போல் வருமா?
அன்னையர் தினம் அன்று மட்டும் உனக்கு
விழா எடுக்க நான் கொடியவனல்ல..
அதே நேரம் உன்னை போற்றும் அந்த தருணத்தை
இழக்க நான் பாவியும் அல்ல…
என் இதய கூட்டுக்குள் நீ அடைக்கப்பட்டதாலோ
என்னவோ உன்னைப் பற்றிய என் கற்பனையும்
வரமறுக்கிறது என் இதயத்தை விட்டு…
வார்த்தை இல்லாமல் தடுமாறுகிறேன்
இன்று உன்னை விட்டு…
நான் செய்த தவம்,
நீ என் அன்னை என்ற வரம்.
நான் அன்று பற்றிப் பிடித்தது உன் கரம்,
இன்று நீ என்னோடு இல்லாத நேரம்,
என் நெஞ்சில் ரணம்.
இது தான் நான் கானும் அன்னையர் தினம்.
தொலைந்து விட்ட நிஜங்கள்,
என்றுமே தொலையாத நினைவுகள்,
அந்த நினைவுக்குள்ளும்
அதிகமாய் நீதான்.
தாயே…