November 30, 2011

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள்

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நாமும் , ஆன்லைன் மூலம்
பொருட்கள் விற்கும் நிறுவனமும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றிதான் இன்றைய சிறப்பு
பதிவு.
ஆன்லைன் மூலம் சேலை வாங்குவதில் தொடங்கி தங்கநகை
வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனிலே வந்துவிட்டது
இருந்தும் இன்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
விரும்புவதில்லை , எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருளுக்கான
பணத்தை எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்
செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்களும்
இதே போல் தான் இருக்கின்றனர், உடனே நாம் கூறுவது
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவர்கள் என்று, நிச்சயமாக
இல்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் அத்தனை பரிணாமமும்
அறிந்தவர்கள் எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை அடிப்பதை ஆரம்பித்தவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள் தான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இவர்களிடம் தப்பாத எந்த நிறுவனமும்
இல்லை என்றே கூறலாம், ஆனால் இவர்கள் முன்பு பயன்படுத்திய
முறையைத்தான் நைஜிரியா நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள்
இப்போது பயன்படுத்துகின்றனர். நைஜிரியா நாட்டு கொள்ளையர்கள்
சிறிய அளவு பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் கம்பி எண்ணிய விசயம்
நாம் அறிந்ததே, ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு கொள்ளையர்கள்
தற்போது செய்வது ஐபி புரொட்டோகோலில் இருக்கும் ஓட்டைகளை
பயன்படுத்தி எந்த இணையதளத்தை முடக்க வேண்டும் இதற்கு
எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டு
இருக்கின்றனர்.மிகப்பெரிய நிறுவனமான கூகிளே படாதபாடு
படுத்திவிட்டனர் என்றால் நம் நிறுவனத்தின் தளத்தை பாதுகாப்பது
எவ்வளவு கடினமான முயற்சி என்று நமக்கு தெரியும். சில
நிமிடங்களில் உங்கள் வங்கியின் கணக்கில் உள்ள பணத்தை
திருடும் அளவு முன்னேறி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment