பொதுவாக விற்பனை நிலையங்களில் உள்ள பொருட்களின் விலையை அல்லது பெறுமதியை விரைவாக அறிந்து கொள்ள பார்கோட் ஸ்கானர்கள் பயன்படுத்தப்படும்.
இவை பொருட்களில் உள்ள பார்கோட் இலக்கங்களை அறிந்து அதிலுள்ள விலை உட்பட்ட விபரங்களை தெரியப்படுத்தும்.
ஆனால் தற்போது தோசிபா நிறுவனம் ஆனது பார்கோட்களை பயன்படுத்தாது பழங்களை நேரடியாகவே ஸ்கான் செய்து அவற்றின் விபரங்களை அறியும் வகையில் புதிய ஸ்கானர் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த ஸ்கானரானது பழத்தின் பருமன், வடிவம், நிறம் போன்றவற்றை கணணியில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுத்தளத்துடன்(Database) பரிசீலனை செய்வதன் மூலம் சிறப்பாக செயற்படுகின்றது.
No comments:
Post a Comment